தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளின் மீது உரிய தீர்வு காணாவிட்டால், டிசம்பர் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள்ளவோ வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.