தமிழகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் அவர்களின் குடும்பத்தில் யார் பெயரில் சொத்து இருந்தாலும் அதனையும் தாக்கல் செய்ய வேண்டும். இதனை வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.