தமிழகத்தில் தாய் மொழியான தமிழை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என்றும் தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் சிவகார்த்திகேயன் அதிரடி உத்திரவிட்டார். இது குறித்து உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் 2 வது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்.
அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து வகை கல்லூரி பல்கலைக்கழகங்களில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி கட்டாய இடம்பெற வேண்டும். அதற்காக தமிழ் மொழி பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும். மேலும் சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்த தகவலையடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் இந்த முடிவை எடுத்துள்ளார்.