தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று (பிப்.21) ஒரு சில இடங்களுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 14,584 வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை இன்று (பிப்ரவரி 22) காலை 8 மணிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதற்கான படிவம் 15 அனைவருக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
Categories
தமிழகம் முழுவதும் இன்று (பிப்.22) காலை 8 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
