Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று உத்தரவு….! நள்ளிரவு முதல் நடவடிக்கை …!!

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை  அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

இன்றும் அதனை தொடர்ந்து வரும் 19, 26 ஆகிய கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளின்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த முழு ஊரடங்கில் பொது மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும். எனவே மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |