புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளியை பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.