Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. மாணவர் சேர்க்கை எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!!

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை ஜூன் முதல் தேதியே தொடங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த காலங்களில் மே மாதமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது கொரோனா விளைவாக மாணவர்கள் நலன்கருதி மே மாதம் 31-ந்தேதிவரை பள்ளித் தேர்வுகள் நடந்துவருகிறது.

ஆகையால் மாணவர் சேர்க்கைப்பற்றி இதுவரை அறிவிப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 ன்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையாக சேர்க்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டுமே தவிர, அரசே தேர்வு செய்து தருவதைத் தவிர்க்கவேண்டும். இதன் மூலம் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறப்பு என்பதை அரசே உறுதிசெய்வதுபோல் உள்ளது.

இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப்பற்றி அறிவிப்பு இன்னும் வராததால் பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அரசு ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் அச்சம் ஏற்படுகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை ஜூன் முதல் தேதியே தொடங்கிடவும், எதிர்வரும் காலத்தில் அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் மாணவர் சேர்க்கையினை ஒரே நாளில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |