தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 (இன்று) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேயர் பதவிக்கான தேர்தல் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ( இன்று ) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.