நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி. தமிழகத்தில் பொதுமக்கள் நலன் கருதி மின்சார ரயில் இயக்க அனுமதி. நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.