Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. இன்று (பிப்…22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது…. ரெடியா இருங்க மக்களே….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இருப்பினும் சில மையங்களில் சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது. இதனிடையில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என்று 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று(பிப்…22)  காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 

Categories

Tech |