Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நாளை மிரட்ட வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

வரும் 11ம் தேதி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுபபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |