தமிழகத்தை உலுக்கும் அளவிற்கு இன்று மிகப் பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை கடையின் சுவற்றில் துளையிட்டு 750 கிராம் தங்க நகைகள்,சுமார் 30 கிலோ வெள்ளி பொருட்கள் என மொத்தம் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
தமிழகத்தை உலுக்கும் கொள்ளை சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!
