Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு அதீத மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் 31 ஆம்  தேதி வரை கனமழை பெய்யக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னையில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30 ஆம் தேதி தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |