Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சலனம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுவை,காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மேலும் நீலகிரி, கோயம்புத்தூர்,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யும். இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |