Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அமல்… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.15 ஆக இருந்த நடைமேடை கட்டணம் இன்று முதல் ரூ.50 ஆக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையங்களிலும் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |