Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |