Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |