Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

ஒமைக்ரான் உறுதியாகி உள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொற்று உறுதியான முப்பத்தி நான்கு பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்.

கொரோனா உறுதியான  114 பேரில் 57 பேருக்கு அறிகுறி இருந்ததால் அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை தமிழகத்தில் சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் இரண்டு பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலையம் மூலமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார் . இதனால் சென்னை, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒமைக்ரான் தொற்று  உறுதியாகியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |