வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது அதன்படி, சென்னை, நீலகிரி, கோவை, தேனியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் 4 நாட்களுக்கு… மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்…!!!
