தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், அவர்களுடைய விவரங்கள் உள்ளிட்டவை குறித்த முக்கிய பட்டியலை பாஜக தலைமைக்கு தமிழக பாஜக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.