Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், தஞ்சை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி,மதுரை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |