தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபத்தி எட்டு மாவட்டங்களில் 9ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள அந்தந்தப் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.