Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாதங்களில்….. ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது… வெளியான தகவல்….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.  ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார்.

Categories

Tech |