தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது தர்மபுரி, மதுரை மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளராக சந்திரசேகர் சகாமுறி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலாளராக அமிர்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர், ஜக்மோகன் சிங் ராஜூ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு கூடுதல் தலைமை செயலாளராக நியமனம். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலாளராக இருந்த மதுமதி ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையராக நியமனம்.
சாஜன் சிங் ஆர். சவான் ரேஷன் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் தற்போது மீன்வளத் துறையின் கூடுதல் ஆணையராக நியமனம். சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தோட்டக்கலைத்துறை மற்றும் பயிர்கள் வளர்ச்சி துறை இயக்குநராக நியமனம். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக உள்ள கார்த்திகா, உயர்கல்வித் துறை இணைச் செயலாளராக நியமனம். மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கரும்பு வளர்ச்சி துறை கூடுதல் ஆணையராக நியமனம். பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி காம் பாலே தற்போது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைச் செயலாளராக நியமனம். தமிழக சிவில் சப்ளை துறை ஆணையராக இருந்த சுதாதேவி தமிழ்நாடு நீர்நிலை துறை வளர்ச்சி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.