தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது. ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர், மாணவர், பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நேரடி வகுப்பு கட்டாயமில்லை. ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவு செய்யலாம் என அரசு தரப்பு பதில் அளித்துள்ளது.