Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விவசாயிகளின் கண்ணீரை துடைத்த முதல்வர்…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடர்ந்து பெய்ததால் விளைநிலங்களை சூறையாடி உள்ளது. அதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வயல்வெளிகளில் தேங்கியதால், வயல்களில் உள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, அருகே உள்ள ராயநல்லூர், புழுதிக்கொடி போன்ற பகுதிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார். பின்னர் மழையில் சேதமடைந்த நெல் பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து மழை பாதிப்புகள் பற்றி முதல்வரிடம் வேளாண்துறை அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள். தொடர்ந்து கண்ணீரோடு நின்ற விவசாயிகளை பார்த்து கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள் கூடிய விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Categories

Tech |