தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதன்படி இதுவரை உயிரிழந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனிவரும் நாட்களில் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவார்கள்.
சான்றிதழில் உயிருடன் இருக்கின்றன அல்லது இறந்துவிட்டனரா என்று மட்டும் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் மகன் அல்லது மகள் உயிரிழந்தால் அவரின் வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். திருமணம் ஆகாதவர் உயிரிழந்தால் தந்தை, தாய், சகோதர சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவார்கள்.குறிப்பாக ஒருவர் ஏழு வருடத்திற்கு மேல் காணாமல் போயிருந்தால் கோர்ட்டில் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.