வங்கக்கடலில் 12 மணிநேரத்தில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும்.
அவ்வாறு புயலாக வலுப்பெற்று வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி டிங்கோனா தீவு-சந்திவிப் இடையில் கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் தென்கிழக்கு, மத்தியகிழக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் போக வேண்டாம் என அதில் குறிப்பிட்டுள்ளது.