Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் முறைகேடு…. பா.ஜ.க தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழக அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. இப்போது மீண்டுமாக அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தரம் இல்லாத பொங்கல்பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய்.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில் தவறுசெய்த எந்த நிறுவனத்தையும் தடை செய்யவில்லை. அந்த 6 நிறுவனங்களில், தரமில்லாத பருப்பு மற்றும் பாமாயில் சப்ளைசெய்த அருணாச்சலா இன்பெக்ஸ்.. இவை வெறும் பருப்பு, பாமாயில் கணக்கு தான். மேலும் மிளகு,புளி, மசாலாபொருட்கள், மளிகைபொருட்கள் என்ற வகையிலே நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரம் அற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு சொற்பத்தொகையை அபராதம் விதித்து  மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம்தான் விடியல் போல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |