Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலர்ட்…. இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…..!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக  அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகன மழை பெய்யக்கூடிய ஒரு சில இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக மழை பெய்யும். கனமழை பெய்யக்கூடிய இடங்களில் 7 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டருக்குள் மேலாக மழை பெய்யும். அதி கனமழை பெய்யக்கூடிய இடங்களை ‘ரெட் அலர்ட்’ என்று குறிப்பிடுகிறோம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |