Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.2000 பணம்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அரசு ஆட்சியை பிடித்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களுக்கு நலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை சிறப்பித்து உரையாற்றியானார்.

இந்நிலையில் ஆளுநரின் உரைக்கு நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.2000 ஆக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னை பெருநகரில் மழை வெள்ளப் பாதிப்பை தடுப்பதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2030க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற பொருளாதர இலக்கை தமிழக அரசு எட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |