தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இரட்டை ரயில் பாதை பணியால் தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி-திருவனந்தபுரம் ரயில் பிப்ரவரி 28 வரை ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-நெல்லை, நாகர்கோவில்-கோவை ரயில்கள் மதுரை வரை மட்டுமே செல்லும். நாகர்கோவில்-பெங்களூர், மும்பை தாதர்-நெல்லை ரயில்கள் விருதுநகர் வரை மட்டுமே செல்லும் என்று தெரிவித்துள்ளது.