தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு ஊரடங்கின்போது வெளியூர் சென்று திரும்புவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை அடுத்து, ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் ஆட்டோ, டாக்சியில் பயணிகள் முறையான கட்டணத்தில் பயணிக்க உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Categories
தமிழகத்தில் முழு ஊரடங்கில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!
