Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்….!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது. அது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக கவசம் அணிந்து அரசு விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் ஊரடங்கு போடப்பட்டால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |