Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு… ரெடியா?… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு மத்தியில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா இரண்டாம் நிலை அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க தமிழக எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |