Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,”தென் தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 20, 23, 24 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாளை தென் தமிழகம் மற்றும் வட தமிழகதின் உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் லேசான பனிமூட்டம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கு எவ்வித  எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை ” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |