Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு…? – புதிய அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியாவில் தொற்று பரவல் அதிகளவில் உள்ளதாக சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, மிசோரம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |