Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் ரூ.1000 கோடி வருவாய்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் வசிப்பவர்களுக்கு சவாலாக உள்ளது .இந்த விதிப்படி ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் மட்டும் ஒரு கிலோ வாட்சுக்கு ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் 2800 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சீர்திருத்தம் மக்களுக்கு சுமையாகவே உள்ளது.

இந்நிலையில் மின்கட்டண உயர்வால் மின்சாரத் துறைக்கு ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.20 கோடி பேர் இணைத்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் மக்கள் அனைவரும் ஆதார் கார்டு இணைக்கும் படி கேட்டுக் கொண்டார். மேலும் மின் கட்டண உயர்வால் மின்சாரத் துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |