Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்திலும் 6 ராஜ்யசபா எம்பி தேர்தலும் அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி என்றும், தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |