தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையைப் பெற பள்ளிகளில் பயில்வோர் நவம்பர் 15ஆம் தேதிகுள்ளும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30-ஆம் தேதி வரையிலும் www.scholerships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
Categories
தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!
