Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு…. ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மழை நீரினை வெளியேற்றும் பணிகளும், மறு சீரமைப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதேசமயம் கனமழை காரணமாக சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து உள்ளது. உட்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |