தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வருகின்ற 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகப்புடன் பணமும் கொடுக்கப்பட உள்ளது. பணத்தை மக்களுக்கு ரொக்கமாக வழங்கலாமா அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் துரைமுருகன் உடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பிறகு அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.