தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு பொது பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பேருந்துகளில் பயணிகள் முழுவதுமாக பயணிக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.