தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணாமலை பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிகமான பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இதனால் இவர்களுக்கான சம்பளம் வீணாக போவதை தடுக்கும் அடிப்படையில் வேறு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இப்பணிக்காலம் இந்த மாதம் முடிய இருந்த நிலையில், மாற்றுப் பணி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 144 உதவி பேராசிரியர்கள் அண்ணா பல்கலை, பாரதிதாசன், மதுரை காமராஜ், பாரதியார் பல்கலைகள், பாலிடெக்னிக்குகளில் மாற்று பணிகளில் இன்னும் ஓர் வருடத்துக்கு நீடிப்பர் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.