தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர்,தமிழக முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மின்வாரிய அலுவலக இடங்களில் முதற்கட்டமாக 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள ஏதுவாக 1.45 லட்சம் இன்கம்பங்கள் தயாராக உள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் திட்டம் இந்த மாதம் தொடங்கப்படும்.மேலும் இன்கெட்டான உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளதால் புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.