Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முழுவதும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்க உள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |