மறுக்கப்பட உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி கல்லூரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகம் மானிய குழுவிலும் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பங்களையும் பரீசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து அந்த உத்தரவு பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிர்த்து 2 கல்லூரிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்ததாகவும், தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழகம் மானிய குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் கல்லூரியில் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகம் மானிய குழு விதிகளின் அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் எந்த விதிகளையும் வகுக்க வில்லை எனவும் கூறினர்.
மேலும் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பங்களை ஏற்றோ அல்லது மறுத்தோ அண்ணா பல்கலைக்கழகம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் பல்கலைக்கழகம் மானிய குழு சுதந்திரமாக ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் தான் தன்னாட்சி அந்தஸ்து குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், கூடுதல் தகவல்களை பெறுவதற்காக மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரை கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த விதிகளை மட்டுமே தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அடிப்படையாக கருத முடியாது எனக்கூறி கல்லூரிகளின் விண்ணப்பத்தை நிராகரித்து பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனால் தன்னாட்சி அந்தஸ்து கோரிய இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை சுதந்திரமாக ப நேரில் ஆய்வு செய்து 4 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த 1 மாதத்தில் எந்த உத்தரவும் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்காததால் தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட கோரி கரூரில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ஒரு வாரத்தில் விண்ணப்பம் குறித்து அறிக்கை பல்கலைக்கழகம் மானிய குழு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அந்த அறிக்கையைப் பெற்ற 4 வாரங்களில் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி 3 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்