Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய திட்டம்….. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து தேர்தல் வாக்குறுதி ஆக பலவற்றை கூறியது. அதேபோல ஆட்சிக்கு வந்த உடனே தேர்தல் வாக்குறுதியி அறிவித்த முக்கிய திட்டங்களை ஒவ்வொன்றாக அரசு செயல்படுத்தி வருகிறது. முக்கியமான பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களுடைய கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்களுடைய நலன் கருதி ஆசிரியர்களின் மனசு என்ற திட்டம் தொடங்கப்படுவது குறித்து புதுக்கோட்டையில் நடந்த “ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்” என்ற நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றும் அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார். ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை [email protected] என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |