Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெற்றோர்கள் மத்தியில் கொரோனா அச்சம் இருப்பதால், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |