தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாங்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என்றார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். மேலும் தொடர்ந்து பேசியவர் காலாண்டு தேர்வில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வினாத்தாள்கள் மாவட்டம் தோறும் வெவ்வேறாக இருக்கும் என்று கூறியுள்ளார்.